விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி முற்றிலும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயநிலையில் உள்ளது. தொட்டி இடிந்து விழுந்து விபரீதம் ஏதும் நிகழ்வதற்கு முன்னர் சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி விட்டு புதிய குடிநீர்தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.