பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூரை அடுத்துள்ள லெப்பைகுடிகாடு பகுதியில் உள்ள ஜாமாலியா நகரில் இரவு நேரங்களில் லெப்பைகுடிகாடு வெள்ளாற்றில் அதிகப்படியாக மணல் அள்ளப்படுகிறது. இதனால் லெப்பைகுடிகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடிநீர் குறைந்து கொண்டே வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.