சுகாதார சீர்கேடு

Update: 2022-08-28 14:28 GMT

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி பகுதிமுழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆங்காங்கே குண்டும், குழியுமாகவும் காணப்படுவதினால் அதில் அதிக அளவில் மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. குறிப்பாக தினமும் பொதுமக்கள் அதிகம் செல்லும் பகுதியான ஜெயங்கொண்டம் செல்லும் பஸ் நிறுத்த பகுதியில் அதிகளவில் குப்பைகள் தேங்கியும், சேறும் சகதியுடன் குட்டைகளில் சாக்கடை நீர் தேங்கியுள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு பல்வேறு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதி முழுவதும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்