அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், நல்லநாயகபுரம் கிராமத்தில் இயங்கி வந்த ரேஷன் கடை கட்டிடம் சிதிலமடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது பயனற்ற நிலையில் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் தற்போது தனிநபர் வீட்டில் இயங்கி வருகிறது. எனவே பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டிடத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.