பயன்பாட்டில் இல்லாத ஏ.டி.எம். எந்திரம்

Update: 2022-08-28 13:11 GMT
பெரம்பலூர் வட்டம், செங்குணம் கிராமத்தில் செயல்படும் ஒரு வங்கி கிளையில் செங்குணம், அருமடல், பாலாம்பாடி, கவுள்பாளையம், சிறுகுடல், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வரவு , செலவுக்கான வங்கி கணக்கு தொடங்கியுள்ள நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த வங்கியில் பொருத்தப்பட்டிருந்த ஏ.டி.எம். எந்திரம் சில ஆண்டுகளாகவே பயன்பாட்டில் இல்லை. இதனால் வாடிக்கையாளர்கள் பலரும் பல்வேறு வகையில் அவதியுற்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்