நூலகத்தில் கழிவறை வசதி தேவை

Update: 2022-07-10 10:39 GMT

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதி பசுபதிகோவில் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி நூலக கட்டிடம் உள்ளது. இந்த நூலகம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவ-மாணவிகள் வந்து நூல்களை படித்து சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த வாசகர்களும் இந்த நூலகத்துக்கு வந்து நூல்களை படித்து செல்கின்றனர். இந்த நிலையில் நூலக கட்டிடத்தில் கழிவறை வசதி இல்லாததால் நூல்களை படிக்க வருபவர்கள், நூலக ஊழியர்கள், பணியாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர். இதன் காரணமாக வாசகர்களின் எண்ணிக்கை குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள நூலகத்தில் கழிவறை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்