பன்றிகள் தொல்லை

Update: 2022-08-27 15:16 GMT


நாகை மாவட்டத்தில் பஸ் நிலையம், ரெயில்நிலையம் உள்பட பல்வேறு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக பன்றிகள் சுற்றித்திரிகின்றன . பன்றிகள் சாலையில் திரிவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும், மேலும் பன்றி வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் , நாகை.

மேலும் செய்திகள்