மாடுகள் தொல்லை

Update: 2022-08-27 14:08 GMT


நாகை பஸ் நிலையம், ரெயில்நிலையம், வெளிப்பாளையம் போன்ற பகுதிகளில் ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றி திரிகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்