விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 35-வது வார்டு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய்களும் உண்டாகிறது. எனவே கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.