மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வாலாந்தூர் பஞ்சாயத்து சக்கிலியங்குளம் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களுக்கு முறையான சாலை வசதி, பஸ் வசதி, மருத்துவமனை, மயான வசதி, குடிநீர் போன்ற எந்தவோரு அடிப்படை வசதியின்றி சிரமப்படுகின்றனர். இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இக்கிராம மக்களுக்கு தேவையான அனைத்துவிதமான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திதர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?