அரியலூர் அரசு பெருந்திட்ட வளாகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட காவல் துறை அலுவலகம் இருந்தது. அப்போது ஒரு வழக்கிற்காக பறிமுதல் செய்யப்பட்ட லாரி ஒன்று அங்கு நிறுத்தப்பட்டது. காவல்துறை அலுவலகம் ஒரு ஆண்டுக்கு முன்பு புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட லாரி அதே இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறது. அதில் உள்ள பல பொருட்களை இரவில் மர்மநபர்கள் திருடி வருகின்றனர். மேலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு நிற்கும் இந்த லாரியை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.