தேசியமயமாக்கப்பட்ட வங்கி அமைக்கப்படுமா?

Update: 2022-08-26 12:48 GMT
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், பாலவிடுதி, முள்ளிப்பாடி, மாவத்தூர் ஆகிய 3 கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் இங்கிருந்து வங்கிக்கு செல்ல வேண்டும் என்றால் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தரகம்பட்டிக்கோ அல்லது 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடவூருக்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்கு ஒரு நாள் ஆகி விடுகிறது. இப்பகுதி பொதுமக்கள் பெரும்பாலும் 100 நாள் வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதனால் இவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலவிடுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்