திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருவெள்ளறை கிராமம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஆயிரகணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசு அனுமதி வழங்கியும், இதுநாள்வரை மாவட்ட மருத்துவத்துறை எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.