சேதமான கட்டிடங்கள்

Update: 2022-08-25 14:06 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள பொதுமயானம் மற்றும் சமுதாயக்கூடம் சேதமடைந்த நிலையில் கட்டிடங்கள் விரிசலடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் இதனை சரியான முறையில் பயன்படுத்த முடியாததால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்