கால்நடைகளை கடிக்கும் தெருநாய்கள்

Update: 2022-08-25 13:11 GMT
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம் உள்பட சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகிறது. இவை கூட்டம், கூட்டமாக சாலைகளில் சுற்றும்போது சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பலர் கீழே விழுந்து அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்பட்டு பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் நாய்கள் கூட்டம் கூட்டமாக சென்று ஆடு, மாடுகளை கடித்து குதறுவதால் இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது போன்ற தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்