கல்பாவி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துரெட்டியூர் கிராமத்தில் பாழடைந்த ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் ஆடு, மாடு, கோழிகள் ஏற்கனவே தவறி விழுந்து உயிரிழந்துள்ளன. மேலும் தற்போது அந்த கிணற்றில் பிளாஸ்டிக் குப்பைகளும் கொட்டப்பட்டுள்ளன. எனவே ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த கிணற்றை ஊராட்சி நிர்வாகம் உடனே மூட வேண்டும். அல்லது தடுப்பு சுவர் கட்டவேண்டும்