நம்பியூா் அருகே உள்ள குருமந்தூர் ரோட்டில், ஆயிபாளையம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியவில்லை. குறிப்பாக அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பஸ்சுக்காக வெயிலில் நிற்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையை மீட்பார்களா?