விருதுநகர் அருகே ஆமத்தூரில் உள்ள சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடம் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள் கட்டிடம் இடிந்து விழுந்து விடுமோ என அச்சப்படுகின்றனர். எனவே சேதம் அடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை உடனே அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.