விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மேலும் பலர் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த பகுதியில் தபால் நிலையம் இல்லை. மேலும் தபால் நிலையத்திற்காக பல கிலோ மீட்டர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் தபால் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.