அரசு மருத்துவமனை முன்பு வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2022-08-24 14:50 GMT
திருச்சி அரசு மருத்துவமனை முன்புறமுள்ள சாலைகளில் கடந்த சில நாட்களாக சாலை பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் அந்த சாலையில் புழுதி பறந்து வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தற்போது அந்த சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகிறார்கள். அவர்களுடன் நோயாளிகளின் உறவினர்களும் வந்து செல்கிறார்கள். இதனால் அந்த பகுதி எப்போதும் பரபரப்புடன் காணப்படும் பகுதியாக உள்ளது. ஆனால் அரசு மருத்துவமனை முன்புறமுள்ள சாலையில் வாகனங்கள் அதிகவேகமாக சென்று வருவதால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருகிறது. ஆகவே இந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி