சமுதாய கூடம் கட்ட கோரிக்கை

Update: 2022-08-24 12:37 GMT

புதுக்கோட்டை மாவட்டம், நத்தம் பண்ணை ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் ஏதேனும் சுப நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பொதுவான இடம் ஒன்று இல்லை. இதனால் பல லட்சம் செலவு செய்து தனியார் திருமண மண்டபங்களை பிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு பொது சமுதாயக்கூடம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்