புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், பணம்பட்டி ஊராட்சி மருதாந்தலை சாலையில் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் நடுவே ஒரு இடத்தில் உடைந்து மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த பள்ளத்தால் பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் அடையும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், பணம்பட்டி
பொதுமக்கள், பணம்பட்டி