‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-12-28 16:37 GMT

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, வெண்ணைமலையில் இருந்து வாங்கல் செல்லும் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் குண்டு குழியுமாக காட்சியளித்தது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனால் அந்த சாலையை சீரமைத்து தார்சாலையாக மாற்றியமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்த செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்