திருச்சி மாவட்டம், அல்லூர் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 4 வார்டுகளுக்கு மட்டுமே காவிரி குடிநீர் கிடக்கிறது. மற்ற 5 வார்டுகளுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை இல்லை. எனவே குடிநீர் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஅப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.