ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-08-24 11:39 GMT
திருச்சி மாவட்டம், பூனாம்பாளையம் கிராம் கருணாநிதி நகர் 1-வது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுக்குடிநீர் குழாய் அருகே மின்கம்பிகளை தாங்கி நிற்கும் ஒரு மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிர்சேதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி