வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?

Update: 2022-08-23 13:05 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, தழுதலைமேடு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தார் சாலை வசதி மற்றும் வடிகால் வசதி இல்லாததால் சிறிய அளவிலான மழை பெய்தால் கூட இப்பகுதியில் சாலைகளில் அதிக அளவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்