அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், உஞ்சினி அம்பேத்கர் நகரில் உள்ள மண் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தரைபாலத்தில் உடைப்பு ஏற்பட்டு குழியாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த பள்ளத்தில் விழுந்து காயம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தை சரிசெய்வதுடன் இப்பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.