கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வேலாயுதம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் உயர் கல்வி படிக்க வேண்டும் என்றால் அருகில் உள்ள ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வேலாயுதம்பாளையம் நடுநிலைப்பள்ளியை உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.