வரத்துவாய்க்கால் அமைக்க வேண்டும்

Update: 2022-08-23 12:26 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தப்பேட்டை பெருமாள் கோவில் திடலில் வாரம் தோறும் திங்கட்கிழமை வார சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வார சந்தை திடலில் மழை பெய்ததால் தண்ணீர் செல்ல வழி ஏதுமில்லை. அருகிலேயே செட்டி ஊரணி உள்ளது. அந்த ஊரணிக்கு தண்ணீர் செல்லும் அனைத்து வரத்து வாய்க்கால்களும் அடைக்கப்பட்டு உள்ளதால் மிகப்பெரிய மழை பெய்தால் கூட அந்த ஊரணி வறண்டு கிடக்கும். வாரசந்தை நடைபெறும்போது திடீரென மழை பெய்தால் வாரசந்தை திடல் முழுவதும் தண்ணீர் தேங்கி காய்கள் தண்ணீரில் மிதந்து செல்லும். மேலும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பணம் ஆகியவை முழுமையாக நனைந்து விடுகின்றனர். ஆகவே வாரந்தோறும் அரிமளம் பேரூராட்சியில் நடைபெறும் வார சந்தை திடலில் மழைநீர் செல்வதற்கு ஏதுவாக வரத்துவாய்க்கால் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்