விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் இரவில் தூக்கமின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த கொசுக்களால் அப்பகுதி குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.