பென்னாகரம் தாலுகா ஆதனூர் பகுதியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் இரவு நேரத்தில் பொதுமக்களுக்கு தொல்லையாக உள்ளது. மேலும் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களை துரத்தி, துரத்தி கடிக்கின்றன. இதனால் சிலர் நாய்க்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தலாமே!