விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் சில வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் இருச்சக்கர வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் எதிரே வரும் பிற வாகன ஓட்டிகள் அச்சத்தில் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் சாலையை கடக்க காத்திருக்கம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நகர் பகுதிகளில் அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுப்பார்களா?