பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆலம்பாடி ரோட்டில் அமைந்துள்ள சமத்துவபுரம் பகுதியில் இன்னும் முடிக்கப்படாமல் கிடப்பில் வைக்கப்பட்டுள்ள சிமெண்டு சாலைகளால் இரவு நேரங்களில் பெருமளவு இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இதனால் விபத்தும் நிகழ்ந்து வருகின்றது. இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் பலர் வீடுகளுக்கு பின்புறமாக சுற்றித்திரிவதால் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற அதிக வாய்ப்புகள் இருகின்றது. எனவே இரவு நேரங்களில் கண்காணிப்பில் ஈடுபடும் போலீசார் சமத்துவபுரம் உள் பகுதிகளிலும் ரோந்து வந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.