பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, மாவிலங்கை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை அந்தப்பகுதி இளைஞர்கள் பல ஆண்டுகளாக விளையாடுவதற்கு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிலர் அந்த நிலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளனர். எனவே அந்த ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.