முகம் சுழிக்க வைக்கும் காதல் ஜோடிகளின் செயல்

Update: 2022-08-22 15:43 GMT

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வளாகத்தின் பின்புறம் உள்ள பகுதி காதல் ஜோடிகளின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. அடிக்கடி அந்தப்பகுதிக்கு காதல் ஜோடிகள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் அவர்கள் அங்கு வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செயல் அந்த வழியாக சென்று வருபவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதிக்கு காதல் ஜோடிகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்