அரியலூர் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பயணிகளின் அடிப்படைத் தேவையான இலவச கழிப்பறை வசதி மற்றும் அவர்கள் அமர்வதற்கான இருக்கைகள் போதுமான அளவு இல்லாமல் உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக முதியவர்கள், பெண்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.