குப்பைகள் கொட்டுவதை தடுப்பார்களா?

Update: 2023-02-08 17:01 GMT

வாலாஜா ஒன்றியம் செட்டித்தாங்கல் ஊராட்சி 9-வது வார்டு வ.உ.சி.நகரில் பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுப்பொருட்கள் ஏராளமாக கிடக்கின்றன. அதில் உள்ள கழிவுப்பொருட்களை சாப்பிட கால்நடைகள் வருகின்றன. அவை குப்பைகள், கழிவுப்பொருட்களை கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. கால்நடைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும் குப்பைகள் கொட்டுவதை தடுப்பார்களா?

-பொதுமக்கள், செட்டித்தாங்கல். 

மேலும் செய்திகள்