குப்பைகளை அகற்றுவார்களா?

Update: 2023-02-08 17:05 GMT

கலவை-திமிரி சாலையில் பேரூராட்சி எல்லையான ஒத்தவாடை வீதி தெரு அருகே ஒரு இடத்தில் மலைபோல் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். அதில் வாழை மட்டைகள், நார், கழிவுப்பொருட்கள் குவிந்துள்ளன. அந்த வழியாக அரசு மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கு துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள், கழிவுப்பொருட்களை உடனடியாக அகற்ற அகரம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெள்ளை, அகரம்.

மேலும் செய்திகள்