குப்பைத்தொட்டி வைப்பார்களா?

Update: 2023-07-12 13:16 GMT

திருவண்ணாமலை நகராட்சி தேனிமலையில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளி சுற்றுச்சுவர் ஓரம் அங்குள்ளவர்கள் குப்பைகளை கொட்டுகிறார்கள். குப்பைகள் காற்றில் பறந்து நாலாபுறமும் சிதறி கிடக்கிறது. அங்கு வரும் நகராட்சி ஊழியர்களும் சரியாக குப்பைகளை சேகரிப்பது இல்லை. பள்ளிக்கூடம் அருகே குப்பைத்தொட்டி இல்லை. திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பள்ளிக்கு அருகில் ஒரு குப்பைத்தொட்டி வைக்க வேண்டும். இல்லையெனில் குப்பைகளை முறையாக சேகரிக்க வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கமல், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்