மேம்பாலத்தில் குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-06-14 17:00 GMT

அரக்கோணம்-திருத்தணி நெடுஞ்சாலையில் உள்ள மங்கம்மாபேட்டை மேம்பாலத்தின் இரு பக்கமும் கோடை வெயிலிலும் பசுமையாக புல், செடிகள் வளர்ந்துள்ளது. மேலும் மணல் குவியலும், குப்பைகளும் உள்ளது. இதனால் பஸ்கள், லாரிகள், கார்கள் செல்லும்போது காற்றில் மண், துகள் பறந்து மோட்டார் சைக்கிள், சைக்கிள்களில் செல்வோரின் கண்களில் விழுவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே விபத்துகள் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலங்களில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சீனிவாசன், அரக்கோணம்.

மேலும் செய்திகள்