குடியிருப்பு பகுதியில் முகக் கவசங்களை வீசும் அவலம்

Update: 2022-09-30 11:41 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கூத்தம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குப்பம் கங்கையம்மன் கோவில் தெருவில் ஒரு தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ்சை நிறுத்தி தினமும் சுத்தம் செய்கிறார்கள். அப்போது தொழிலாளர்கள் பயன்படுத்திய முகக் கவசத்தை அங்குள்ள குடியிருப்பு பகுதியில் குடிநீர் குழாய் அருகே வீசி செல்கின்றனர். இதுபற்றி கிராம மக்கள், பஸ் டிரைவரிடம் கேட்டால், அவர் பதில் சொல்வதே இல்லை. குடியிருப்பு பகுதியில் முகக் கவசங்கள் வீசுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ் மேஸ்திரி, கூத்தம்பாக்கம். 

மேலும் செய்திகள்