குப்பைகளை கொளுத்தும் அவலம்

Update: 2024-04-14 10:50 GMT

காட்பாடி காந்தி நகர் வி.ஜி. ராவ் நகர் போன்ற பகுதிகளில் ஒவ்வொரு தெருவிலும் குப்பைகளை குவித்து தீ வைத்து எரிக்கப்படுகிறது. துப்புரவு ஊழியர்களுக்கு குப்பைகளை சேகரித்து எடுத்துச் செல்ல சரியான வாகன வசதி இல்லாமல் இருக்கலாம். எரியும் குப்பைகளில் பிளாஸ்டிக் பொருட்களும் இருப்பதால், சுற்றுச்சூழல் மாசு படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, காட்பாடி.

மேலும் செய்திகள்