குப்பைகளை எரிக்கும் அவலம்

Update: 2022-09-15 12:46 GMT

ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் சேகரிக்கும் மக்கும், மக்கா குப்பைகளை வாகனத்தில் கொண்டு வந்து பேரூராட்சி அலுவலகம் அருகில் பின்பக்கம் கொட்டி தினமும் தீ வைத்து எரிக்கின்றனர். அதில் இருந்து நச்சுப்புகை எழுந்து மக்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரிக்க வளம் மீட்பு பூங்கா என்ற இடம் இருந்தும் அனைத்துக் குப்பைகளும் தினமும் தீ வைத்து எரிக்கப்படுகிறது. குப்பைகளை தீ வைத்து எரிப்பதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.

-இரா.இளவரசன் சமூக ஆர்வலர், விளாப்பாக்கம். 

மேலும் செய்திகள்