குப்பைகளை கொட்டும் அவலம்

Update: 2022-11-16 13:45 GMT

வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-2 எத்திராஜ் பள்ளி வெளி பக்க கதவு எதிரே சாலையோரம் குப்பைகளை கொட்டுகிறார்கள். குப்பைகளை சேகரித்து வரும் தூய்மைப்பணியாளர்களும் அங்கு குப்பைகளை கொட்டுகிறார்கள். அந்த இடத்துக்கு நாய்கள், பன்றிகள் வந்து குப்பைக்கழிவுகளை கிளறி விடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை சுத்தமாக அள்ளி அப்புறப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

-பொதுமக்கள், வேலூர். 

மேலும் செய்திகள்