ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் உள்ள குமரன் வீதியில் குப்பைகள் குவிந்து வருகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் அங்கு பாம்பு போன்ற விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லவே அச்சமாக இருக்கிறது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?