புகையால் மாணவிகள் பாதிப்பு

Update: 2023-03-08 11:21 GMT

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வடச்சேரி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஏராளமான குப்பைகளை சேர்த்து உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் வகுப்பறையில் அமர முடியாமலும், படிக்க முடியாத அளவுக்கு கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் பள்ளி வளாகத்துக்குள் தீவைப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்