குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-03-22 16:18 GMT

வேலூர் நல்லண்ணன் தெருவில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பை கொட்டுவோரை அக்கம் பக்கத்தினர் கண்டித்தும் யாரும் கேட்பதாக தெரியவில்லை. கால்வாயில் இருந்து கழிவுநீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே எங்கள் தெருவில் தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், நல்லண்ணன் தெரு, வேலூர். 

மேலும் செய்திகள்