குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-15 09:40 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெரியாங்குப்பம் கிராமம் காந்திநகர் ரெயில்வே மேம்பாலம் அருகில் துப்புரவு பணியாளர்கள் வாகனங்களில் ஏராளமான குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். அந்தப் பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளது. காற்றில் குப்பைகள் பறந்து வந்து, வீடுகளின் வாசல்களில் விழுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. அந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

-கோகுல், பெரியாங்குப்பம்.

மேலும் செய்திகள்