அரக்கோணத்தை அடுத்த பெருமுச்சு ஊராட்சி அலுவலகத்தை சுற்றிலும் பழைய இரும்புகள், குப்பைக்கழிவுகள் குவிந்துள்ளது. ஊராட்சி அலுவலகம் எதிரே குளக்கரையில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் வீசப்பட்டு குவியலாக கிடக்கின்றன. இதனால் குளம் சுகாதார சீர்கேடு ஏற்பட்டும், மாசு அடைந்தும் நோய் பரவும் அபாயம் உள்ளது. நோய் பரவலை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயன், வெங்கடேசபுரம், அரக்கோணம்.