கோத்தகிரி தாலுகா மிளிதேன் அரசு பள்ளிக்கு அருகே உள்ள சாலையோரத்தில் தனியார் விடுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அந்த குப்பைகளை அகற்றி, அதனை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.